Thursday, January 28, 2010

57 - ம் ஆண்டு ருத்ராபிஷேகம்

அன்பர்களே! வரும் 12.12.2010 அன்று வெள்ளிகிழமை, தைத்திங்கள் 30 ஆம் நாள் அருள்மிகு கோஷாம்பிகா சமேத ஸ்ரீ ரெத்தின சாயாவனேஸ்வரர் சுவாமிக்கும், ஸ்ரீ பாலசுப்பிரமணிய மூர்த்திக்கும் ருத்ராபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்துகொண்டு இறையருள் பெற வேண்டுவோர் இதுகுறித்து மேலும் தகவல் பெற செல்: 9443107069 தொடர்பு கொள்ளவும். இவ்விழா சார்ந்த பத்திரிக்கையை கீழே காணலாம்.








பகிர்ந்துகொள்ளுங்கள்

அன்புள்ளம் கொண்டவர்களே! இறைபணி சார்ந்து வெளியிடப்படும் இந்த புளோகின் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கெடுக்கலாம். உங்களின் கருத்துகளையும் நீங்கள் பதிவு செய்யலாம். அருள்மிகு சாயாவனேஸ்வரர் ஆலயம் குறித்த செய்திகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். எப்படியெனில், உங்களின் கருத்துகள், ஆலயம் சார்ந்த தகவல்கள் ஆகியவற்றை எனது கீழ்க்காணும் இ-மெயில் முகவரிக்கு அனுப்புவதன் மூலம், நீங்கள் தரும் தகவலை எவ்வித மாற்றமும் இன்றி இந்த புளோகில் வெளியிடலாம்.
எனது இமெயில் முகவரி:

Monday, January 25, 2010

திருச்சாய்க்காடு - தலவிளக்கம்


இடம்: நாகை மாவட்டம், சீர்காழி வட்டம், காவேரிபூம்பட்டினம்

கோயில்: திருச்சாய்க்காடு, சாயாவனம்

இறைவன்: சாயாவனநாதர்

இறைவி: கூ என்ற கோதையம்மை

தீர்த்தம்: ஐராவத தீர்த்தம், சங்கமுக தீர்த்தம்.

திருமுறைகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவர்கோன்.

வழிபட்டோர்: உபமன்யு, இந்திரன், ஐராவதம், இயற்பகை நாயனார்.

இலக்கியம்: தல புராணம்

வழி: மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகள்.

அருகாமை கோயில்கள்: பல்லவனம், சம்பாபதியம்மன் கோயில், காளியம்மன் கோயில்.

வில்லேந்திய வேலவர்


மூலவர்


அணுகுங்கள்

கோயில் பூஜைகள், விசேஷங்கள் பற்றிய தகவல் பெற அன்புடன் அணுகுங்கள்.

திரு.B.சந்திரசேகரசிவம்,
குருக்கள்,
ஸ்ரீ சாயாவனேஸ்வரர் ஆலயம்,
சாயாவனம், பூம்புகார் அஞ்சல்,
சீர்காழி தாலுக்கா - 609105
செல்: 94431 07069
இ-மெயில்: indusekarddn@yahoo.com