Sunday, November 6, 2011

கந்த சஷ்டி விழா

கடந்த 26/10/2011 முதல் 01/11/2011 வரை, அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயிலில் அருள்மிகு வில்லேந்திய வேலவருக்கு கந்த சஷ்டி பூஜைகள் நடைபெற்றன. 01/11/2011 அன்று மதிய அளவில் அருள்மிகு வில்லேந்திய வேலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஸ்ரீ செந்தில் ஆண்டவராகிய வில்லேந்திய வேலவருக்கு செய்யப்பட்டிருந்த அலங்காரத்தினையும், மாலையில் நடைபெற்ற திருக்கல்யாண வைபோகத்தையும் கண்டு எல்லாம் வல்ல கலியுக தெய்வமாய் விளங்கும் சாயாவனத்திலிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ செந்தில் ஆண்டவரின் திருவருள் பெறுவோமாக!